ADDED : ஜூலை 27, 2011 10:40 PM
தேனி : பூதிப்புரம் ராமகாரன் தெருவை சேர்ந்தவர் கண்மணி (24).
இவருக்கும் துரைமோகனுக்கும் (31)2007ல் திருமணமானது. திருமணத்தின் போது 21 பவுன் நகை, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பாத்திரங்கள் கொடுத்தனர். கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார். கண்மணி கொடுத்த புகாரில் தேனி மகளிர் போலீசார் துரைமோகன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.