/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/லஞ்சம், ஊலழற்ற நிர்வாகம் : சுயேச்சை வேட்பாளர் உறுதிலஞ்சம், ஊலழற்ற நிர்வாகம் : சுயேச்சை வேட்பாளர் உறுதி
லஞ்சம், ஊலழற்ற நிர்வாகம் : சுயேச்சை வேட்பாளர் உறுதி
லஞ்சம், ஊலழற்ற நிர்வாகம் : சுயேச்சை வேட்பாளர் உறுதி
லஞ்சம், ஊலழற்ற நிர்வாகம் : சுயேச்சை வேட்பாளர் உறுதி
ADDED : அக் 13, 2011 10:13 PM
குஜிலியம்பாறை : ''அடிப்படை வசதிகள் முழுமை பெறவும், மக்களுக்காக எந்த நேரமும் உழைப்பேன்,'' என, ஆர்.கோம்பை ஊராட்சியில் ஏணி சின்னத்தில்போட்டியிடும் தலைவர் பதவி வேட்பாளர் செல்வி ஸ்ரீதர் தெரிவித்தார்.
தற்போது ஒன்றிய கவுன்சிலரான அவர் கூறியது: கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆர்.கோம்பை ஊராட்சியில், 10 இடங்களில் புதிய குடிநீர் போர்வெல்கள் அமைத்து, தன்னிறைவு காணப்பட்டுள்ளது.
நெற்களம்-3, சிமென்ட் ரோடு-16, நாடமேடை-1, அங்கன்வாடி-2, சமையல் கூடம் -2, தடுப்பு சுவர்-5 அமைக்கப்பட்டது. ஆர்.கோம்பை பள்ளிக்கு நவீன நடைபாதை (ரூ.5.25 லட்சம்) உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மீண்டும் வெற்றி பெற்றால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்படும். பொது, தனி நபர் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு சுகாதரம் மேம்படுத்தப்படும். அரசு வழங்கும் அனைத்து நல திட்டங்களும், பாரபட்சமின்றி வழங்கப்படும். நலிந்தோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்க முயற்சி எடுக்கப்படும். மண் சாலைகள், தார், சிமென்ட் சாலைகளாக மாற்றப்படும், என்றார்.


