கோவில் சொத்து அபகரிப்பு வழக்கு : தி.மு.க., பெண் கவுன்சிலர் உட்பட 7 பேர் குற்றப்பிரிவு போலீசில் சரண்
கோவில் சொத்து அபகரிப்பு வழக்கு : தி.மு.க., பெண் கவுன்சிலர் உட்பட 7 பேர் குற்றப்பிரிவு போலீசில் சரண்
கோவில் சொத்து அபகரிப்பு வழக்கு : தி.மு.க., பெண் கவுன்சிலர் உட்பட 7 பேர் குற்றப்பிரிவு போலீசில் சரண்
சேலம் :சேலத்தில், கோவில் சொத்து அபகரிப்பு வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி தி.மு.க., பெண் கவுன்சிலர், வழக்கறிஞர்கள் உட்பட 7 பேர் நேற்று, மாநகர குற்றப்பிரிவு போலீசில் சரணடைந்தனர்.
சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது.
ஆனால், கோவில் சொத்து தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக டிரஸ்டி பத்ரிநாராயணன், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், எற்கனவே சவுந்திரராஜன் மீது புகார் கொடுத்த ராதாகிருஷ்ணன், கடந்த ஜூலை 6ம் தேதி, கோவில் சொத்து அபகரிப்பு தொடர்பாக, மாநகர நிலஅபகரிப்பு மீட்டுக்குழுவில் புகார் செய்தார்.
இவ்வழக்கில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, 7 பேரும், முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், 7 பேருக்கும், 12 வார காலத்துக்கு மட்டும் இடைக்கால ஜாமின் வழங்கி, நீதிபதி சுதந்திரம் உத்தரவிட்டார். மேலும், மாநகர நிலமீட்புக்குழு போலீசில், 7 பேரும் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டது. அதன்படி, கவுன்சிலர் சரளா குணசேகரன், அனந்தசுப்ரமணியம், வழக்கறிஞர்கள் ரமேஷ், மணிவண்ணன் உட்பட 7 பேரும், நேற்று சேலம் மாநகர நிலஅபகரிப்பு மீட்புக்குழுவிடம் சரணடைந்தனர்.