ADDED : செப் 01, 2011 12:26 AM
சோழவந்தான்: சோழவந்தான் நைனார் ஜூம்மா தொழுகை பள்ளிவாசலில் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.
ஜமாத் கமிட்டி தலைவர் ஹாஜிஅபுபக்கர் தலைமையில் இஸ்லாமிய இளைஞர்கள் திருக்குரான் பாடிக்கொண்டு ஊர்வலமாக ஈத்கா பள்ளி வாசலுக்கு சென்றனர். அங்கு பள்ளிவாசல் அஜ்ரத் உலக நன்மைக்காக, நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ரம்ஜான் சிறப்பு தொழுகையை நடத்தினார். தொழுகை முடிந்தவுடன் மும்மத்தினரும் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.