Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சேஷ வாகனத்தில் தீவனூர் பெருமாள்

சேஷ வாகனத்தில் தீவனூர் பெருமாள்

சேஷ வாகனத்தில் தீவனூர் பெருமாள்

சேஷ வாகனத்தில் தீவனூர் பெருமாள்

ADDED : செப் 25, 2011 01:41 AM


Google News
திண்டிவனம்:புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு தீவனூர் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு, வீதியுலா நடந்தது.திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆதிநாராயணப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு ஹோமம் நடந்தது.

மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மாலை 7 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், சேஷ வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். பூஜைகளை ராமானுஜதாசர் செய்தார். விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us