ADDED : ஆக 28, 2011 11:25 PM
திண்டிவனம் : முதல்வர் ஜெ.,தலைமையிலான அ.தி.மு.க., அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவுபெற்றதை வெள்ளிமேடுபேட்டையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் பன்னீர் தலைமை தாங்கினார். திண்டிவனம் தொகுதி இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ஜெயபாலன், மயிலம் தொகுதி இணை செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மண்டல செயலாளர் ரங்கநாதன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஜனார்த்தனன், பேரவை இணை செயலாளர் முருகானந்தம், சிறுபான்மை பிரிவு செயலாளர் மக்பூர்பாய், ஒன்றிய மாணவர் அணி தலைவர் முருகன், துணைத்தலைவர் பாரதி, இணை செயலாளர் சீனு, ஊரல் ஊராட்சி தலைவர் ராஜாராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.