மலை பாதைகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டதால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். சதுரகிரி மலையில் இன்று நடக்கும் ஆடி அமாவாசை விழா ல் கலந்து கொள்வதற்காக கடந்த ஒருவாரமாகவே பக்தர்கள், சாதுக்கள் மலைக்கு வந்தவண்ணம் இருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அமாவாசை வழிபாடு இன்று காலையில் துவங்குகிறது. இதனால் நேற்று பக்தர்களின் வருகை மிக அதிகளவில் இருந்தது. வனப்பகுதிக்குள் நுழையும் பக்தர்களிடம் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வனத்துறையினர், பாலித்தீன், பீடி, சிகரெட், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையறிந்த சிலர் கூல்டிரிங்ஸ் உடன் மதுவை கலந்து கொண்டு சென்றனர். அதையும் பறிமுதல் செய்தனர். அடிவாரம் முதல் மலை உச்சியில் கோயில் வளாகம் வரை நடைபாதைகளில் கடைகள் அமைக்க வனத்துறையினர் தடை விதித்தனர். ஆனால், மாங்கேனி, அத்தியூத்து, கோணத்தலைவாசல், காராம்பசுத்தடம், கோரக்க நாதர்குகை, சின்னப்பசுக்கிடை, நாவல்ஊற்று, இரட்டைலிங்கம் கோயில் ஆகிய இடங்களில் மிக குறுகிய பாதைகளில் அதிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்ததால், இடங்களில் மலை ஏறுபவர்களும், இறங்குபவர்களும் சிரமப்பட்டனர். இந்த இடங்களில் இன்று லட்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால் கடைகளை அகற்றுவது மிக அவசியம். அத்துடன் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் தேவை. மலை உச்சியில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் கோயில் வளாகத்திலிருந்து வெள்ளைப்பாறை மடம் வரை நடைபாதை முழுவதும் பக்தர்கள் மலஜலம் கழித்து அசுத்தப்படுத்திஉள்ளனர். அந்த இடத்தை மூக்கைப்பிடித்தபடி பக்தர்கள் கடந்து சென்றனர். கோயில் விழா ஏற்பாடுகளை சென்னை அறநிலையத்துறை ஆணையர் முத்தையா கலைவாணன், மதுரை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் வில்வமூர்த்தி ஆய்வு செய்தனர். நேற்று விசேஷ அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் சிவராத்திரி வழிபாடு துவங்கியதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மலை பாதைகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டதால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். சதுரகிரி மலையில் இன்று நடக்கும் ஆடி அமாவாசை விழா ல் கலந்து கொள்வதற்காக கடந்த ஒருவாரமாகவே பக்தர்கள், சாதுக்கள் மலைக்கு வந்தவண்ணம் இருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அமாவாசை வழிபாடு இன்று காலையில் துவங்குகிறது. இதனால் நேற்று பக்தர்களின் வருகை மிக அதிகளவில் இருந்தது. வனப்பகுதிக்குள் நுழையும் பக்தர்களிடம் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வனத்துறையினர், பாலித்தீன், பீடி, சிகரெட், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையறிந்த சிலர் கூல்டிரிங்ஸ் உடன் மதுவை கலந்து கொண்டு சென்றனர். அதையும் பறிமுதல் செய்தனர். அடிவாரம் முதல் மலை உச்சியில் கோயில் வளாகம் வரை நடைபாதைகளில் கடைகள் அமைக்க வனத்துறையினர் தடை விதித்தனர். ஆனால், மாங்கேனி, அத்தியூத்து, கோணத்தலைவாசல், காராம்பசுத்தடம், கோரக்க நாதர்குகை, சின்னப்பசுக்கிடை, நாவல்ஊற்று, இரட்டைலிங்கம் கோயில் ஆகிய இடங்களில் மிக குறுகிய பாதைகளில் அதிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்ததால், இடங்களில் மலை ஏறுபவர்களும், இறங்குபவர்களும் சிரமப்பட்டனர். இந்த இடங்களில் இன்று லட்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால் கடைகளை அகற்றுவது மிக அவசியம். அத்துடன் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் தேவை. மலை உச்சியில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் கோயில் வளாகத்திலிருந்து வெள்ளைப்பாறை மடம் வரை நடைபாதை முழுவதும் பக்தர்கள் மலஜலம் கழித்து அசுத்தப்படுத்திஉள்ளனர். அந்த இடத்தை மூக்கைப்பிடித்தபடி பக்தர்கள் கடந்து சென்றனர். கோயில் விழா ஏற்பாடுகளை சென்னை அறநிலையத்துறை ஆணையர் முத்தையா கலைவாணன், மதுரை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் வில்வமூர்த்தி ஆய்வு செய்தனர். நேற்று விசேஷ அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் சிவராத்திரி வழிபாடு துவங்கியதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.