/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புவனகிரி அருகே கோஷ்டி மோதலில் இருவர் கைதுபுவனகிரி அருகே கோஷ்டி மோதலில் இருவர் கைது
புவனகிரி அருகே கோஷ்டி மோதலில் இருவர் கைது
புவனகிரி அருகே கோஷ்டி மோதலில் இருவர் கைது
புவனகிரி அருகே கோஷ்டி மோதலில் இருவர் கைது
ADDED : ஜூலை 15, 2011 12:57 AM
புவனகிரி : ஆடு மேய்ந்த தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 8 பேரை தேடி வருகின்றனர். புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டையைச் சேர்ந்தவர் மச்சவல்லவன். இவரது ஆடு பக்கத்து வீட்டைச் சேர்ந்த வீரமணி வயலில் மேய்ந்தது. அதனால் ஆட்டை வீரமணி அடித்தார். நஷ்ட ஈடாக 2, 000 வேண்டுமென மச்சவல்லவன் கூறவே பணம் தருவதாக வீரமணி ஒப்புக் கொண்டார். வீரமணிக்கு ஆதரவாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் பேசினர்.
ஆத்திரமடைந்த மச்சவல்லவன் மற்றும் ஆதரவாளர்கள் விஜயக்குமார், மணிக்கண்ணன், வேலு, சரவணன் உட்பட 6 பேர் கடந்த 11ம் தேதி கிருஷ்ணமூர்த்தி, நடராஜ், லட்சுமணன், முல்லைராஜா, துரை ஆகியோரை தாக்கினர். பதிலுக்கு கிருஷ்ணமூர்த்தி ஆதரவாளர்கள் மச்சவல்லவன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்கினர். இருதரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விஜயக் குமார், மணிகண்ணனை கைது செய்தனர். கிருஷ்ணமூர்த்தி உட்பட 8 பேரை தேடி வருகின்றனர்.