போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
ADDED : ஆக 11, 2011 12:56 AM
திண்டுக்கல் : பாதுகாப்பு கேட்டு, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த காதல் ஜோடி, சந்திரசேகரன் எஸ்.பி., யிடம் தஞ்சமடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சண்முகப்பிரியா (26). இதே பகுதியை சேர்ந்த ஜேக்கப் நிர்மல்ராஜூவுடன், காதல் ஏற்பட்டது. சண்முகப்பிரியா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வீட்டை விட்டு வெளியேறி, ஒட்டன்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஜோதிநிர்மல்ராஜை திருமணம் செய்துகொண்டார். இருவரும் எஸ்.பி., யிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இருவரது பெற்றோரையும் அழைத்து சமாதான பேச்சு நடத்தவும், பாதுகாப்பு தரவும், மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.


