ADDED : ஜூலை 26, 2011 09:18 PM
உடுமலை : உடுமலை அருகே வாகத்தொழுவில், நாளை மனுநீதிநாள் முகாம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கிறது.
மடத்துக்குளம் தாலுகாக வாகத்தொழுவு கிராமத்திற்குட்பட்ட மூங்கில்தொழுவு பிரிவு செஞ்சேரிமலை ரோட்டிலுள்ள முத்துலட்சுமி திருமண மண்டபத்தில், நாளை (28ம் தேதி) காலை 11.00 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமையில், சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம். இத்தகவலை மடத்துக்குளம் தாசில்தார் சின்னசாமி தெரிவித்தார்.