/உள்ளூர் செய்திகள்/சேலம்/நில அபகரிப்பு முயற்சி வழக்கில் ஏழு பேர் ஜாமீன் மனு "டிஸ்மிஸ்'நில அபகரிப்பு முயற்சி வழக்கில் ஏழு பேர் ஜாமீன் மனு "டிஸ்மிஸ்'
நில அபகரிப்பு முயற்சி வழக்கில் ஏழு பேர் ஜாமீன் மனு "டிஸ்மிஸ்'
நில அபகரிப்பு முயற்சி வழக்கில் ஏழு பேர் ஜாமீன் மனு "டிஸ்மிஸ்'
நில அபகரிப்பு முயற்சி வழக்கில் ஏழு பேர் ஜாமீன் மனு "டிஸ்மிஸ்'
ADDED : செப் 21, 2011 01:05 AM
சேலம்: நில அபகரிப்பு முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஏழு
பேரின் ஜாமீன் மனு, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
சேலத்தில் உள்ள கோயம்புத்தூர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பிரேம்நாத்துக்கு
சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,
பாரப்பட்டி சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஸ்ரீரங்கநாதன்,
பாலகுருமூர்த்தி, வக்கீல் தெய்வலிங்கம் உள்பட, 16 பேர் மீது சி.சி.பி.,
போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் லட்சுமணன்,
பாலகுருமூர்த்தி, ஸ்ரீரங்கநாதன், முரளி, சரவணன், ஜான் அலோசியஸ், நாராயணன்
ஆகிய ஏழு பேர் ஜாமீன் கேட்டு, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று
நடந்தது. மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், ஏழு பேரின் ஜாமீன்
மனுவை, 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.