/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/இந்திய அரசியல்வாதிகள் வெளிநாட்டில் வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்தால் ஒரு நபருக்கு 3 லட்சம்இந்திய அரசியல்வாதிகள் வெளிநாட்டில் வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்தால் ஒரு நபருக்கு 3 லட்சம்
இந்திய அரசியல்வாதிகள் வெளிநாட்டில் வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்தால் ஒரு நபருக்கு 3 லட்சம்
இந்திய அரசியல்வாதிகள் வெளிநாட்டில் வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்தால் ஒரு நபருக்கு 3 லட்சம்
இந்திய அரசியல்வாதிகள் வெளிநாட்டில் வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்தால் ஒரு நபருக்கு 3 லட்சம்
தூத்துக்குடி : இந்திய நாட்டில் உள்ள அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள் வெளிநாடுகளில் வைத்துள்ள கருப்புபணத்தை கொண்டு வந்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் 3 லட்ச ரூபாய் இலவசமாக கொடுக்க முடியும் என்று தூத்துக்குடியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட பிரமாண்ட ஆனந்த சங்கமத்தில் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் ஜி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து குருஜி ரவிசங்கர் ஜி பேசியதாவது; தூத்துக்குடியில் குறுகிய காலத்தில் இதுபோன்ற மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதே போல் குறுகிய காலத்தில் நம் நாட்டை நோய் இல்லாத ஆன்மிக நாடாக மாற்ற முடியும். அதற்கான முயற்சிகள் தான் தற்போது செய்யப்பட்டு வருகிறது. ஆன்மிகம் என்றால் பஜனை பாடுவது ஆன்மிகம் கிடையாது. எல்லோரும் அன்புமனப்பான்மையுடன் இருப்பது தான் ஆன்மிகம். அன்பே சிவம். அன்புக்கு சமமான சக்தி உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. ஆழமான தியானம் பண்ணினால் அன்பு கிடைக்கும். அநியாயத்தை ஒழிக்க வேண்டும். அதனை எதிர்த்து ஒன்றுபட்டு மக்கள் நிற்க வேண்டும். அகம்பாவம் இருக்கவே கூடாது. எந்த காரணம் கொண்டும் என்னிடம் ஒன்றும் இல்லை என்கிற இல்லாமைப்பாட்டு பாடக் கூடாது. இல்லாமையை ஒழிக்க பாடுபட வேண்டும். இதற்கு சிரமப்பட்டு வேலைகள் செய்ய வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தம் ஒழிக்கப்பட வேண்டும். நம் வீட்டையும், நாட்டையும், ஊரையும், மனதையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது தான் நாம் கடவுளுக்கு செய்கிற நன்றியாகும். 30 ஆண்டுகளாக இதற்காக முயற்சி செய்து வருகிறோம். எத்தனையோ நாடுகளுக்கு சென்று பயிற்சி அளித்து வருகிறோம். இதில் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக தெரிகிறது.
நம் நாட்டில் மட்டும் தான் மனிததன்மையை அதிகமாக பார்க்கிறோம். அதுவும் நம் நாட்டில் உள்ள கிராமங்களில் தான் அதனை அதிகம் பார்க்கிறோம். மற்ற நாடுகளில் இது இல்லை. ஜப்பான் நாட்டை பொறுத்தமட்டில் எல்லோரும் சேர்ந்து உழைப்பார்கள். லீடர் சொல்வதை அப்படியே கேட்பார்கள். ஜெர்மன் நாட்டை பொறுத்தமட்டில் எந்த வேலையை சொன்னாலும் அதனை பெர்பெக்டாக செய்து முடிப்பார்கள். இதற்காக நேரம், காலம் பார்க்க மாட்டார்கள். இந்த நாடுகளில் இருந்து நாம் இதனை கற்றுக்கொள்ள வேண்டும்.
பிரிட்டீஷ் நாட்டை சேர்ந்தவர்களிடம் நல்ல பண்பாடு உள்ளது. அதனை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்காவினரிடம் வியாபாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். அமாவாசை என்று சந்திரனை அமெரிக்கர்கள் விற்பனை செய்து விடுவர். வியாபாரத்தில் அவர்கள் அவ்வளவு கில்லாடி. அவர்களை அதில் மிஞ்ச முடியாது.
கடனில் மூழ்கிற நிலையில் அணுமின் திட்டங்களை நம்மிடம் 60 பில்லியனுக்கு நம்மிடம் விற்று விட்டு சென்று விட்டனர். இதுபோன்ற அணுமின் திட்டத்தால் தற்போது கூடங்குளத்தில் மக்கள் உண்ணாவிரதம் இருந்து போராட வேண்டிய நிலை வந்தது. நாட்டு நலனுக்காக மக்கள் போராட முன் வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். இதன் மூலம் புதிய யுகம் ஆரம்பித்துள்ளது. நாட்டு நலனுக்காக மக்கள் போராட வேண்டும். நம் வேலையை பார்த்து விட்டு நாம் போவோம். அதில் ஏன் தலையிட வேண்டும் என்று இருக்க கூடாது. எதற்கும் மக்கள் எழுந்து நிற்க வேண்டும். இதன் மூலம் வெற்றி காண முடியும்.
அன்னாஹசாரேவுடன் சேர்ந்து நானும் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வாழும் கலை அமைப்பு பல நாடுகளில் இருப்பதால் அவர்கள் இதுபோன்று அனைத்து நாடுகளில் ஆதரவு தெரிவித்து பிரச்னை ஏதேனும் வந்துவிடும். அதன் மூலம் நம் நாட்டிற்கு கெட்ட பெயர் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் உண்ணாவிரதம் இருக்கவில்லை. தியான பயிற்சியின் மூலம் வாழ்க்கையில் நல்ல அமைதியை காணமுடியும். இனிமையை கொண்டுவர முடியும். அன்பு மயமான வாழ்க்கை வருவதற்கு கண்டிப்பாக எல்லோரும் தியானம் செய்ய வேண்டும். வெளிநாடுகளில் நம் நாட்டு அரசியல் வாதிகளும், தொழில் அதிபர்களும் கருப்பு பணம் மிக அதிக அளவில் வைத்துள்ளனர். இந்த பணம் குறித்து கணக்கு போட முடியாது. 3 பில்லியன் டாலர் என்கிறார்கள். ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை சீரோ போட்டாலும் முடியாது.
பின்னர் மக்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்து சுவாமிஜி பேசியதாவது;