/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நல்லூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம்நல்லூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம்
நல்லூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம்
நல்லூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம்
நல்லூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம்
ADDED : ஆக 08, 2011 04:07 AM
சிறுபாக்கம் : நல்லூர் ஒன்றிய அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.நல்லூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் குறித்த அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றிய வளாகத்தில் நடந்தது.
பி.டி.ஓ., ராஜவேல் தலைமை தாங்கினார். மேலாளர்கள் மோகன்ராஜ், ஜெயக்குமாரி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் நடைமுறைப் பணிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள், வளர்ச்சிப் பணிகளின் நிலவரம், புதிய பணிகள் தேர்வு செய்தல், உள்ளிட்ட பல்வேறு கலந்தாய்வுகள் நடந்தன.கூட்டத்தில் பொறியாளர் சுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிசாமிநாதன், ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.


