ADDED : ஜூலை 26, 2011 11:55 PM
அவலூர்பேட்டை : அவலூர்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பெண் இறந்தார்.
அவலூர்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன். 'டிவி' மெக்கானிக். இவரது மனைவி மஞ்சுளா, கடந்த 22ம் தேதி வீட்டில் சமையல் செய்ய மண்ணெண்ணெய் ஸ்டவ் பற்ற வைத்துள்ளார். எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து பலத்த காயமடைந்த மஞ் சுளா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.