ADDED : செப் 30, 2011 11:06 PM
மஞ்சூர் : 'காந்தியின் 142ம் ஆண்டு ஜெயந்தி விழா, நலிந்தோர் உதவி தொகை மற்றும் தையல் இலவச பயிற்சியின் ஓராண்டு நிறைவு விழா, அறக்கட்டளையின் 10 ம் நிறைவு விழா,' என முப்பெரும் விழா 2ம் தேதி மஞ்சூர் எச்.கே., டிரஸ்ட் கட்டடத்தில் நடக்கிறது.
காந்தி சேவா அறக்கட்டளை செயலாளர் போஜன் வரவேற்கிறார், தலைவர் வாசுதேவன் தலைமை வகிக்கிறார். கிருஷ்ணன், செவனன், ஆலம்மாள், சுப்ரமணி முன்னிலை வகிக்கின்றனர். காந்தி சேவா அறக்கட்டளை உறுப்பினர் காந்தி நன்றி கூறுகிறார்.