தாடிக்கொம்பு:ரெட்டியார்சத்திரம் அருகே வாடிப்பட்டி காலனியை சேர்ந்தவர் பிச்சை(49).
மனநலம் பாதிக்கப்பட்ட இவர், நேற்று முன்தினம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளார். நேற்று வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்


