Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திண்டுக்கல்லில் சிவகாசி கள்ளநோட்டு

திண்டுக்கல்லில் சிவகாசி கள்ளநோட்டு

திண்டுக்கல்லில் சிவகாசி கள்ளநோட்டு

திண்டுக்கல்லில் சிவகாசி கள்ளநோட்டு

ADDED : செப் 26, 2011 10:28 PM


Google News

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிடிபட்ட கள்ளநோட்டுக்கள், சிவகாசியில் அச்சடித்ததாக தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1000, 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கம் தாராளமாக உள்ளது. திண்டுக்கல் நாகல்நகர் கனரா வங்கியில், சில கள்ளநோட்டுக்கள் வந்தன. இது குறித்து வங்கி மேலாளர், புகார் அளித்தார். இதன்படி, திண்டுக்கல்- பழநி ரோட்டில் உள்ள லாட்ஜில், கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த கோபால்பட்டி பழனிச்சாமி, ஸ்கீம் ரோடு தட்ணாமூர்த்தியை, போலீசார் கைது செய்து, 8,500 ரூபாய் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர். சிவகாசியில்: போலீசார் நடத்திய விசாரணையில், சிவகாசியில் முருகன் என்பவர் வீட்டில், பாதாள அறையில் கள்ள நோட்டு அச்சடித்ததாக தெரிவித்தனர். முருகனை பிடிக்க, இன்ஸ்பெக்டர் இயேசு ராஜசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us