ADDED : செப் 01, 2011 01:53 AM
குறிச்சி : ஊட்டி நகராட்சி அலுவலகத்தில், ராஜிவ் படத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதை கண்டித்து, குறிச்சி மற்றும் வெள் ளலூர் நகர காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சுந்தராபுரம், நான்கு ரோடு சந்திப்பு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, குறிச்சி நகர காங்., தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.
வெள்ளலூர் நகர காங்., தலைவர் பாசுமணி, துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மதுக்கரை ஒன்றிய தலைவர் பாலு, அஜீஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.