ADDED : ஆக 11, 2011 11:22 PM
பேரூர் : தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு, இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
தொண்டா முத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச் சருமான வேலுமணி வழங்கிய நிதியில் இருந்து அரசு பள்ளி மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா, தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கோதை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.