ADDED : ஜூலை 24, 2011 09:28 PM
சிவகங்கை : சிவகங்கை அருகே சாலூர் பள்ளி சத்துணவில் பல்லி விழுந்தது தொடர்பாக, சத்துணவு அமைப்பாளர் உட்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ராஜாராமன் உத்தரவிட்டார்.
சிவகங்கை அருகே சாலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், கடந்த 22ம் தேதி சத்துணவு சாப்பிட்ட 43 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர். சத்துணவில் பல்லி விழுந்ததால், மயக்கமடைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். கலெக்டர் ராஜாராமன் தலைமையில் விசாரணை நடத்தினர். இதில், சுகாதாரமற்ற முறையில் உணவு சமைத்ததாக, சத்துணவு அமைப்பாளர் ரவிபானு, சமையலர் ஜெயராம், உதவியாளர் அழகி ஆகிய மூன்று பெண்களையும் 'சஸ்பெண்ட்' செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.