ADDED : ஆக 13, 2011 04:35 AM
திருவாடானை : தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த மாரிச்செல்வம் (45).
இவர் அதே கிராமத்தில் நகைக்கடை வைத்துள்ளார். 2010 டிச.16ம் தேதி இவரது கடையில் புகுந்த திருடர்கள் 139 கிராம் தங்கம், 750 கிராம் வெள்ளியை திருடி சென்றனர். தொண்டி போலீசார், தொண்டி புதுக்குடியை சேர்ந்த காளிஸ்வரன் (23), தளிர்மருங்கூர் கிராமத்தை சேர்ந்த ஜோசப் (50) ஆகியோரை கைது செய்தனர். இருவருக்கும் ஏழு மாதம் சிறை தண்டனை விதித்து திருவாடானை கோர்ட் மாஜிஸ்திரேட் நம்பி தீர்ப்பளித்தார்.