ADDED : ஜூலை 11, 2011 03:04 AM
குளித்தலை: குளித்தலையில் அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி நான்காம்
ஆண்டு மாணவிகளுக்கான பட்டறிவு பயிற்சி முகாம் மற்றும் கலந்துரையாடல்
நிகழ்ச்சி நடந்தது.முகாமில், வேளாண் துறையில் மகளிர் பங்கு, விவசாய
பணிகளால் பொருளாதார முன்னேற்றம், இயற்கை உரம், மண்புழு உரம் அவசியம்,
மஞ்சள் காவியா தயாரிக்கும் செயல்முறைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம்
அளிக்கப்பட்டது.கிராமியம் இயக்குநர் நாராயணன், மாநில பயிற்றுநர், மாவட்ட
பயிற்றுநர்கள் மலையப்பன், பெரியசாமி, கல்லூரி பேராசிரியர்கள் தியாகராஜன்,
சசிகலா, நித்யா, ஆவுடைதாய் உள்பட பலர் பங்கேற்றனர்.