Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/பள்ளி வாகனம் கவிழ்ந்து 42 சிறுவர்கள் பலி

பள்ளி வாகனம் கவிழ்ந்து 42 சிறுவர்கள் பலி

பள்ளி வாகனம் கவிழ்ந்து 42 சிறுவர்கள் பலி

பள்ளி வாகனம் கவிழ்ந்து 42 சிறுவர்கள் பலி

ADDED : ஜூலை 11, 2011 11:52 PM


Google News

தாகா : வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் உள்ள மிர்ரேசராய் என்ற இடத்தில், நேற்று கால்பந்து போட்டி நடந்தது.

இதை பார்ப்பதற்காக ஒரு பள்ளியை சேர்ந்த 70 மாணவர்கள் லாரியில் அழைத்து செல்லப்பட்டனர். போட்டி முடிந்து பள்ளிக்கு திரும்பி கொண்டிருந்த போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் 42 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பலியாகினர். மீதமுள்ள சிறுவர்களை தேடும் பணி நடக்கிறது. ராணுவம் மற்றும் கடற்படையை சேர்ந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us