ADDED : ஜூலை 11, 2011 11:21 PM
திண்டிவனம் : இலவச ஓட்டுனர் பயிற்சி முடித்தவர்களுக்கு திண்டிவனம் சேர்மன் பூபாலன் டிரைவிங் லைசென்சை வழங்கினார்.
திண்டிவனம் நகராட்சி மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முப்பது பேருக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு 6 மாதம் திருவண்ணாமலை அருணை ஐ.டி.ஐ., நிறுவனத்தினர் பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்ற முப்பது பேருக்கும் மானியமாக தலா 2 ஆயிரத்து நூறு ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி முடித்த 30 பேருக்கும் டிரைவிங் லைசென்சை சேர்மன் பூபாலன் வழங்கினார். நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்திரன், மேலாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் அப்பாஸ் மந்திரி, ராஜசக்தி, சவுந்தர், ஜெயராஜ், முரளிதாஸ் உடனிருந்தனர்.