/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/லே-அவுட் அமைக்க விளைநிலங்கள் அழிப்பு விவசாய பரப்பு குறைகிறதுலே-அவுட் அமைக்க விளைநிலங்கள் அழிப்பு விவசாய பரப்பு குறைகிறது
லே-அவுட் அமைக்க விளைநிலங்கள் அழிப்பு விவசாய பரப்பு குறைகிறது
லே-அவுட் அமைக்க விளைநிலங்கள் அழிப்பு விவசாய பரப்பு குறைகிறது
லே-அவுட் அமைக்க விளைநிலங்கள் அழிப்பு விவசாய பரப்பு குறைகிறது
ADDED : ஆக 05, 2011 01:33 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் லே-அவுட் அமைப்பதற்காக விவசாய
விளை நிலங்கள் அழிக்கப்படுகிறது. இதனால் விவசாய பரப்பு சதவீதம் ஒவ்வொரு
ஆண்டும் குறைந்து வருகிறது.பொள்ளாச்சி தாலுகா கேரளா எல்லையை
ஒட்டியுள்ளதாலும், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும்
லே-அவுட் தொழில் சூடுபிடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்,
பொள்ளாச்சியில் அதிகளவில் 'லே-அவுட்' அமைக்கப்பட்டு இடம் விற்பனை
செய்யப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக லே-அவுட் அமைப்பது குறைந்திருந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக லே-அவுட் அமைக்கும் பணிகள்
தீவிரமடைந்துள்ளன.பொள்ளாச்சியில் கோவை ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு,
நடுப்புணி ரோடு, மீன்கரை ரோடு, வால்பாறை ரோடு, பல்லடம் ரோட்டில் லே-அவுட்
களின் எண்ணிக்கையும், குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து
வருகிறது.சைட் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், தென்னை
விவசாயம் அழிக்கப்பட்டு புதிதாக லே-அவுட்கள் உருவாக்கப்படுகின்றன. விலைக்கு
வாங்கியிருந்த தோப்புகளில் உள்ள தென்னை மரங்கள் வேரோடு தோண்டி
எடுக்கப்பட்டு, சைட்டுக்கு இடம் பிரிக்கப்படுகிறது.
பொள்ளாச்சி மீன்கரைரோடு,
நடுப்புணி ரோடுகளில் மொத்தம் ஐந்து இடங்களில் லே-அவுட்கள்
அமைக்கப்படுகிறது.லே-அவுட் உரிமையாளர்கள் கூறுகையில், 'இரண்டு ஆண்டுகளாக
இடம் விற்பனையாவது குறைந்திருந்ததால் புதிதாக லே-அவுட் அமைக்கவில்லை.
தற்போது, விற்பனைக்கு இடம் இல்லாததால் ஒவ்வொரு பகுதியிலும் புதிதாக
லே-அவுட் அமைக்கப்படுகிறது. விளைச்சல் இல்லாத விளை நிலங்களில் தான்
லே-அவுட் அமைக்கப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு பாதிப்பில்லை.
லே-அவுட்டில் ஒரு சென்ட் 30 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது'
என்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் மானாவாரி
நிலப்பரப்பு குறைந்து விட்டது. கேரளா மற்றும் திருப்பூரை சேர்ந்தவர்கள்
விவசாய விளை நிலங்களை வாங்கி, லே-அவுட்களாக
பிரிக்கின்றனர்.தென்னந்தோப்புகளை விலைக்கு வாங்குவோர், அவற்றை
பராமரிக்காததால் விளைச்சல் குறைந்து விடுகிறது. அதன்பின், மரம்
காய்ப்பதில்லை என்று கூறி லே-அவுட் அமைக்கின்றனர். இதனால் விவசாய
நிலப்பரப்பின் சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.விவசாய விளை
நிலங்களில் லே-அவுட் அமைப்பதை தடுக்க அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.
இல்லாவிட்டால் விவசாயம் அழிந்து விடும். உணவு உற்பத்தி செய்யும் நிலை மாறி,
உணவுக்காக கையேந்தும் நிலை உருவாகும்' என்றனர்.