Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பொறுப்புள்ளவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசலாமா? கடலூரில் அழகிரி எம்.பி., காட்டம்

பொறுப்புள்ளவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசலாமா? கடலூரில் அழகிரி எம்.பி., காட்டம்

பொறுப்புள்ளவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசலாமா? கடலூரில் அழகிரி எம்.பி., காட்டம்

பொறுப்புள்ளவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசலாமா? கடலூரில் அழகிரி எம்.பி., காட்டம்

ADDED : செப் 20, 2011 08:58 PM


Google News

கடலூர் : ''இலங்கையில் தமிழர்களுக்கு சம அதிகாரத்தை பெற்றுத் தர உலக நாடுகளின் மதிப்பை நாம் பெற வேண்டும்'' என எம்.பி., அழகிரி பேசினார்.

மாவட்ட காங்., சார்பில் ராஜிவ் படுகெலைக்கு நீதி கேட்டு கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஞானசந்திரன், நகர தலைவர் திலகர், மணி, வட்டத் தலைவர்கள் ராஜலிங்கம், வரதன் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பாளர் குமார், நகர தலைவர் ரகுபதி, முன்னாள் எம்.பி., கலியபெருமாள், வழக்கறிஞர் சந்திரசேகர், மெய்யப்பன், ராகுல் இளையோர் பேரவை மாநில தலைவர் சிவக்குமார், தொகுதி தலைவர் வனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.



அழகிரி எம்.பி., பேசியதாவது: ராஜிவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என காங்., சொல்லவில்லை. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தை மதிக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் தண்டனை குறித்து பேசக்கூடாது. முதல்வர் ஜெயலலிதா 1991ம் ஆண்டு ராஜிவ் கொலையாளி பிரபாகரனை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். அவரே மூவரின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.



முன்னாள் முதல்வர் கருணாநிதி 2000ம் ஆண்டில் அமைச்சர்கள் கூட்டத்தில் நளினியை தவிர மற்ற மூவரின் கருணை மனுக்களை நிராகரித்து அப்போதைய கவர்னருக்கு அனுப்பி வைத்தவர் இன்று மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கூறுகிறார். பொறுப்புள்ளவர்கள், இப்படி பொறுப்பற்ற முறையில் பேசலாமா? திராவிடக் கட்சிகள் இலங்கை பிரச்னையை அவர்கள் சொந்த பிரச்னையாக எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு கஷ்டம் வரும்போது அவர்களின் மன நிலை மாறுகிறது. ராஜிவ் கொலையாளிகள் தமிழர் என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என போராடுகின்றனர். தண்டனை பெற்ற 23 பேரில் 19 பேர் விடுதலை செய்த அன்று தீர்ப்பை எதிர்த்து போராடினோமா.



ஐ.நா., ஆய்வு குழுவின் அறிக்கையில் ராஜபக்ஷே மனித உரிமையை மீறியுள்ளார் என கூறப்பட்டுள்ளது. அதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளும் லட்சக்கணக்கானோரை மனித கேடயமாக பயன்படுத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர்களுக்கு சம அதிகாரத்தை பெற்றுத் தர உலக நாடுகளின் மதிப்பை நாம் பெற வேண்டும். தமிழர்கள் என்று சொல்லி கொலையாளிகளுக்கு கருணை காட்டினால் அதனை தமிழர்களும், தமிழகமும் ஏற்றுக் கொள்ளாது. இவ்வாறு அழகிரி எம்.பி., பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us