/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/விளாத்திகுளம் அருகேமின்னல் தாக்கி ஒருவர் பலிவிளாத்திகுளம் அருகேமின்னல் தாக்கி ஒருவர் பலி
விளாத்திகுளம் அருகேமின்னல் தாக்கி ஒருவர் பலி
விளாத்திகுளம் அருகேமின்னல் தாக்கி ஒருவர் பலி
விளாத்திகுளம் அருகேமின்னல் தாக்கி ஒருவர் பலி
ADDED : அக் 14, 2011 01:33 AM
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி ஒருவர்
பலியானார்.விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அடுத்துள்ள என்.வேடபட்டியைச்
சேர்ந்த திருப்பதி, அவரது மனைவி மாரீஸ்வரி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த
பிச்சையா மனைவி சுப்பம்மாள் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் காட்டில் களை
எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில்
மின்னல் தாக்கி மாரீஸ்வரி (வயது45) சம்பவ இடத்திலேயே பலியானார்.
சுப்பம்மாள் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான மாரீஸ்வரியின் உடல் விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத
பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இதுகுறித்து
சங்கரலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


