ADDED : ஆக 30, 2011 02:32 AM
நத்தம்:நத்தத்திற்கு சரக்கு கொள்முதலுக்காக வருவோருக்கு கழிப்பறை அமைக்க வேண்டும்.இங்கு நவதானியம், பருத்தி, புளி வாங்க, விற்க ஏராளமான கிராமத்தினர் வருகின்றனர்.
இவர்கள் இயற்கை உபாதை கழிக்க வசதி இல்லை. தெருக்கள், குடியிருப்பு பகுதிகளில் சிறுநீர் கழிக்கின்றனர். இப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. வெளியூர் மக்களுக்காக கட்டண கழிப்பறை அமைக்க, தொடர்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால் பயன் இல்லை. சுகாதாரகேட்டை தடுக்க, கலெக்டர் நாகராஜன் முயற்சிக்க வேண்டும்.


