ADDED : செப் 20, 2011 08:58 PM
கடலூர் : இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நலவாரிய நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
சிதம்பரத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சுந்தரமூர்த்தி இறந்தார். அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்ததால் நிவாரணத் தொகையாக ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் தொழிலாளர் நல அலுவலர்கள் வெங்கடேசன், குணசேகரன் வழங்கினர். பொதுத் தொழிலாளர் சங்கச் செயலர் குமார், நகர செயலர் தியாகராஜன், கட்டுமான சங்க மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கொளஞ்சிநாதன் உடனிருந்தனர்.


