Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஒலக்கூர் ஒன்றியத்தில்மனு தாக்கல் துவங்கியது

ஒலக்கூர் ஒன்றியத்தில்மனு தாக்கல் துவங்கியது

ஒலக்கூர் ஒன்றியத்தில்மனு தாக்கல் துவங்கியது

ஒலக்கூர் ஒன்றியத்தில்மனு தாக்கல் துவங்கியது

ADDED : செப் 25, 2011 01:44 AM


Google News
திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்தில் தேர்தலில் மனு தாக்கல் துவங்கியது.ஒலக்கூர் ஒன்றிய தேர்தல் அலுவலராக ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன், அவருக்கு துணையாக எட்டு உதவி தேர்தல் அலுவலர்களும், மற்றொரு தேர்தல் அதிகாரியாக ராஜசேகர் என்பவரும், அவருக்கு உதவியக 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 2 வார்டுகளும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கு 16 வார்டுகளும் உள்ளன. ஊராட்சி தலைவர் பதவிக்கு 52 இடங்களும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 345 இடங்களும் உள்ளன.கடந்த 22ம் தேதி மனு தாக்கல் துவங்கி நேற்று(25ம் தேதி) வரை ஒலக்கூர் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு14 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us