/உள்ளூர் செய்திகள்/மதுரை/செல்லம்பட்டி ஒன்றியத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனைசெல்லம்பட்டி ஒன்றியத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை
செல்லம்பட்டி ஒன்றியத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை
செல்லம்பட்டி ஒன்றியத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை
செல்லம்பட்டி ஒன்றியத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை
ADDED : அக் 02, 2011 12:58 AM
செக்கானூரணி : செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இரு மாவட்ட கவுன்சிலர்கள், 16 ஒன்றிய கவுன்சிலர்கள், 29 ஊராட்சி தலைவர்கள், 240 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட 287 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
மாவட்ட கவுன்சிலர்களுக்கு 20, ஒன்றிய கவுன்சிலர்களுக்கு 163, ஊராட்சி தலைவர் பதவிக்கு 200, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 708 பேர் என ஆயிரத்து 91 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் தேர்தல் அலுவலர்கள் ரூபன் சங்கர்ராஜ், ஜெயராமன் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று முன் தினம் பரிசீலனை செய்யப்
பட்டன.
ஒன்றிய 14வது வார்டு கவுன்சிலருக்கான மனுக்கள் பரிசீலனையின் போது அ.தி.மு.க., வேட்பாளர் அங்குசாமி, ''தி.மு.க. சார்பில் மனு செய்த உக்கிரபாண்டி பெயர் வாக்காளர் பட்டியலில் மதுரை மாநகராட்சி, பி.மேட்டுப்பட்டி என இரு இடங்களில் உள்ளது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றார். ஆனால் அலுவலர்கள், ''வாக்காளர் பட்டியலில் இரு இடங்களில் பெயர் உள்ளது என்பதற்காக மனுவை தள்ளுபடி செய்ய முடியாது. மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் இருந்து உக்கிரபாண்டி பெயரை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.
10வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு மனு செய்த செல்வம்(அ.தி.மு.க.,) மற்றும் முத்துராமன்(தி.மு.க.,) சகோதரர்கள்.


