ADDED : செப் 01, 2011 11:53 PM
தூத்துக்குடி : தூத்துக்குடியில் கப்பல்படை, என்சிசி., சார்பில் ரத்ததான முகாம் தூத்துக்குடி பொது ஆஸ்பத்திரியில் நடந்தது.
முகாமை வஉசி., கல்லூரி கப்பல்படை, என்சிசி., அதிகாரி லெப்டினென்ட் குமாரசாமி துவக்கி வைத்தார். முகாமில் காமராஜ் கல்லூரி, வஉசி., கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி, போப் கல்லூரியை சேர்ந்த என்சிசி., மாணவ,மாணவியர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். ஏற்பாடுகளை காமராஜ் கல்லூரி கப்பல்படை அதிகாரி லெப்டினென்ட் அசோக் செய்திருந்தார்.