பா.ம.க., நிர்வாகி கொலை : 2 பேர் கோர்ட்டில் சரண்
பா.ம.க., நிர்வாகி கொலை : 2 பேர் கோர்ட்டில் சரண்
பா.ம.க., நிர்வாகி கொலை : 2 பேர் கோர்ட்டில் சரண்
ADDED : ஜூலை 27, 2011 11:51 PM
தூத்துக்குடி: மதுரை பா.ம.க., நிர்வாகி படுகொலை தொடர்பாக, இருவர் திருச்செந்தூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
மதுரை பை-பாஸ் ரோடு, வேல்முருகன் நகரில் வசித்தவர் இளஞ்செழியன்,42. பா.ம.க., நிர்வாகியான இவர், 26ம் தேதி காலை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக , மதுரை அவனியாபுரம் காசிராஜன்,34, பாலா,29, ஆகிய இருவர் திருச்செந்தூர் ஜே.எம்., கோர்ட்டில் சரணடைந்தனர். நீதிபதி பரித்தா உத்தரவுப்படி இவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.