/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தோல்வியை கண்டு துவளாதவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி: சுகி சிவம் பேச்சுதோல்வியை கண்டு துவளாதவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி: சுகி சிவம் பேச்சு
தோல்வியை கண்டு துவளாதவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி: சுகி சிவம் பேச்சு
தோல்வியை கண்டு துவளாதவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி: சுகி சிவம் பேச்சு
தோல்வியை கண்டு துவளாதவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி: சுகி சிவம் பேச்சு
தர்மபுரி: ''தோல்வியை கண்டு துவளாமல் தோல்வியே வெற்றியின் ஒரு பகுதி என நினைத்து செயலாற்றுபவர்கள் வாழ்க்கையில் உயரமுடியும் என சுகி சிவம் தெரிவித்தார்.
தோல்வியை கண்டு பயப்படுபவர்கள் கோழைகளாவர். தோல்வியை வெற்றியின் ஒரு பகுதி என நினைத்து செயலாற்றுபவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகின்றனர். சமுதாயம், சமூகம் ஆகியவற்றில் உதவியை எதிர்பார்க்காமல் தனது சொந்த முயற்சியின் மூலம் வெற்றியடைய முடியும். குறிப்பாக விவேகானந்தர் தியானம் செய்வதற்காக உதவியை எதிர்பார்த்த போது அந்த உதவி கிடைக்காமல் தானே கடலில் நீந்தி சென்று பாறை மீது தியானம் செய்து சாதனை படைத்தவர்.
நம்மில் பலர் சிரிப்பதற்கே சங்கடப்பட்டு வருகின்றனர். பிறந்த ஆறு மாத குழந்தை கூட தின்ம் 247 முறை சிரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த மாணவ காலத்தில் நகைச்சுவையோடு நாள்தோறும் சிரித்து மகிழ வேண்டும். முடிவு எடுக்கும் தகுதியை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு நல்ல முடிவு எடுப்பவர்கள் தலைவராக மாறி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். துறைத்தலைவர் தாண்டவவேல் நன்றி கூறினார்.


