Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் அணியும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் அணியும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் அணியும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் அணியும் நிகழ்ச்சி

ADDED : ஆக 14, 2011 02:22 AM


Google News
கடலூர் : ஆவணி அவிட்டத்தையொட்டி கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பூணூல் அணியும் நிகழ்ச்சி நடந்தது.கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நாகராஜ குருக்கள் தலைமையில் பூணூல் அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.அதேப்போன்று கூத்தப்பாக்கம் ராகவேந்தரர் பிருந்தாவனத்தில் பூணூல் அணிவித்தல் நிகழ்ச்சியும், ரிக், யஜூர் வேத உபகர்மாவும் நடந்தது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டி வருண ஜபமும், இயற்கையினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.

நிகழ்ச்சியில் கோவில் தலைவர் குருமூர்த்தி, வழக்கறிஞர் குருராஜ், டாக்டர் பிருந்தாவன்குமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் சீனுவாசன், எஸ்.பி.,நேர்முக உதவியாளர் கோவிந்தராஜன் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.சிதம்பரம்: நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் நேற்று அதிகாலை முதல் சுற்றுப்பகுதி மற்றும் வெளியூர்களிலிருந்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் நீராடி குளக்கரையில் பூணூல் மாற்றிக்கொண்டனர். அப்போது வேதங்கள் ஓதி, மந்திரங்கள் ஜபித்து முன்னோர்களை நினைத்தும் வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us