/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கரிவலம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவர் பலிகரிவலம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவர் பலி
கரிவலம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவர் பலி
கரிவலம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவர் பலி
கரிவலம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவர் பலி
ADDED : செப் 30, 2011 02:26 AM
திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் அருகே விஷம் குடித்த கல்லூரி மாணவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சரகம் பெரும்பத்தூர் சர்ச் தெருவில் வசித்து வருவர் கோயில்பிள்ளை. விவசாயி. இவரது மகன் ராகவன் (23). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ.,இரண்டாமாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாராம். அன்று இரவு ராகவன் வீட்டில் பருத்தி மகசூலுக்கு வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து வாந்தி எடுத்துள்ளார்.
உடனடியாக இவரை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோயில்பிள்ளை கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராஜன் வழக்குபதிவு செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தன் விசாரணை நடத்தி வருகிறார்.