ADDED : செப் 28, 2011 11:23 AM
திருச்சி: திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்தவர் ராஜா ராமன்.
இன்ஜினியர். இவருடைய தம்பி விக்ரம் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் ரகளை செய்வாராம். இந்நிலையில், நேற்றிரவு குடித்து விட்டு ரகளை செய்த விக்ரமை ராஜாராம் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த விக்ரம் அண்ணன் ராஜாராமை கழுத்தையறுத்து கொலை செய்தார். கருமண்டபம் போலீசார் விக்ரமை கைது செய்தனர்.