Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மகளிர்குழுவினருக்கு கடன் விபர"கையேடு' வழங்கும் பணி சுணக்கம்

மகளிர்குழுவினருக்கு கடன் விபர"கையேடு' வழங்கும் பணி சுணக்கம்

மகளிர்குழுவினருக்கு கடன் விபர"கையேடு' வழங்கும் பணி சுணக்கம்

மகளிர்குழுவினருக்கு கடன் விபர"கையேடு' வழங்கும் பணி சுணக்கம்

ADDED : ஆக 05, 2011 10:41 PM


Google News
சிவகங்கை:மகளிர் சுய உதவி குழுவினருக்கு 'விபர கையேடு' வழங்காததால், அவர்கள் வங்கிகளை ஏமாற்றி கடன் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவிற்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. கந்து வட்டி கும்பலிடம் இருந்து இவர்களை பாதுகாக்க குழுக்களை அமைத்து சுழல்நிதி வழங்கினால், அவர்களது சமூக பொருளாதாரம் உயரும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது.அரசு பரிந்துரையின்படி, வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன்களை முறையாக திருப்பி செலுத்தினாலும் ஒரு வங்கியில் கடன் பெற்ற குழுவினர், அதை மறைத்து மற்ற வங்கி கிளையில் கடன் பெறுகின்றனர்.

இதை தடுக்க மகளிர் சுய உதவி குழு பெற்ற கடன் விபரம்; கட்டவேண்டிய நிலுவை தொகை போன்ற விபரங்கள் அடங்கிய விபர கையேடுகளை அவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டது.புகைப்படத்துடன் கூடிய விபர கையேடு வழங்க திட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.மகளிர் சுய உதவி குழு நிர்வாகி ஒருவர் கூறுகையில், '' மகளிர் குழுவினர் கடன் பெற்ற தொகை, திருப்பி செலுத்திய விபரம் போன்ற விபரம் அடங்கிய கையேடுகளை வழங்க அரசு உத்தரவிட்டது. இக்கையேடு, சில மாவட்டங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அலுவலர்களின் அலட்சிய போக்கால், சில குழுவினர் கந்து வட்டி கும்பலாக மாறும் நிலை உள்ளது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us