அ.தி.மு.க., செயற்குழு, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: இன்று பரபரப்பாக கூடுகிறது
அ.தி.மு.க., செயற்குழு, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: இன்று பரபரப்பாக கூடுகிறது
அ.தி.மு.க., செயற்குழு, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: இன்று பரபரப்பாக கூடுகிறது

சென்னை: அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம் மற்றும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று பரபரப்பாக கூடுகிறது.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்காவில் உள்ள மாகாணங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பொருளாதார மற்றும் தொழில் திட்டங்களை இணைந்து செயல்படுத்தலாம் என்றும், முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு வரும்படி அழைப்பு விடுத்த ஹிலாரிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது. அரசு கேபிள் 'டிவி' திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், விவசாயிகளுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்தும், நிலம் மற்றும் வீடு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டும், சட்டரீதியான நடவடிக்கை அவர்கள் மீது எடுத்து வருவதற்கு பாராட்டும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிந்ததும், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும் கூட்டம் துவங்குகிறது. வரும் 4ம் தேதி தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. அக்கூட்டத்தில், புதிய எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும். தொகுதி மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுத்தாமல் பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா பேசிய பின், கூட்டம் முடிவடையும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.