மருத்துவ காப்பீடை அரசே ஏற்று நடத்த கோரிக்கை
மருத்துவ காப்பீடை அரசே ஏற்று நடத்த கோரிக்கை
மருத்துவ காப்பீடை அரசே ஏற்று நடத்த கோரிக்கை
ADDED : ஆக 06, 2011 04:19 PM
கரூர்: அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கரூரில் நடந்த அரசு ஊழியர் சங்க மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் அருகே உள்ள காந்தி கிராமத்தில் அரசு ஊழியர் சங்க மண்டல மாநாடு நடந்தது. இம்மாநாட்டில், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை கைவிட்டு, காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, தனியாருக்கு அளிப்பதை விட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.