
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இனி, வன்னியர்கள் வேறு எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.
டவுட் தனபாலு: இங்கே இப்படி பேசறீங்க... மற்ற இடங்கள்ல, 'சமூக சமத்துவத்துக்காக போராடுற ஒரே கட்சி பா.ம.க., தான்'கிறீங்க... சுமுகமா கொடியை அகற்றணும்னு பத்த வச்சிருக்கீங்க... அது எவ்ளோ சுமுகமா இருக்கும்னு, மக்களுக்குத் தெரியாதா...?
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்துள்ளது. தவறிழைத்த பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் கொண்டு வந்து உடனடியாக நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு, இந்த பயங்கரவாதிகள் தலையெடுக்கவிடக் கூடாது.
டவுட் தனபாலு: என்னமோ போங்க... உங்க நிலைப்பாடே புரிய மாட்டேங்குது... நீங்க தான் ஒரு சிலரை, 'தண்டிக்கணும்; மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது'ன்னு சொல்றீங்க... நீங்க தான் ஒரு சிலரை, 'மன்னிச்சுவிட்டுடணும்... மனிதாபிமான முறையில செயல்படணும்'கிறீங்க... பாவம், இந்த அரசாங்கம் என்ன தான் செய்யும்...?
தி.மு.க., தலைவர் கருணாநிதி: சமச்சீர் கல்வியை ஏற்க மறுத்து, பழைய பாடத்திட்டத்தின்படி புத்தகங்களை அச்சடிக்க கொடுத்தார். அந்தப் புத்தகங்களின் கதி என்ன? அதற்காக அரசுக்கு ஆன செலவு எவ்வளவு? இதற்கெல்லாம் அ.தி.மு.க., ஆட்சியினர் பதில் கூற வேண்டும்.
டவுட் தனபாலு: அதுல என்ன சந்தேகம்... புதிய தலைமைச் செயலகக் கட்டடத்துக்காக, பல கோடி ரூபாய் செலவுல, 'டம்மி'யா ஒரு, 'சினிமா செட்டிங்' போட்டீங்களே... அதுக்கு என்ன கதி ஆச்சோ, அதே கதி தான் இதுக்கும்...!