/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கவுன்சிலிங் நடத்தாமல் இடமாறுதல்:ஆசிரியர்கள் புலம்பல்கவுன்சிலிங் நடத்தாமல் இடமாறுதல்:ஆசிரியர்கள் புலம்பல்
கவுன்சிலிங் நடத்தாமல் இடமாறுதல்:ஆசிரியர்கள் புலம்பல்
கவுன்சிலிங் நடத்தாமல் இடமாறுதல்:ஆசிரியர்கள் புலம்பல்
கவுன்சிலிங் நடத்தாமல் இடமாறுதல்:ஆசிரியர்கள் புலம்பல்
ADDED : ஆக 30, 2011 02:40 AM
குஜிலியம்பாறை:நடப்பு கல்வியாண்டில், ஆசிரியர்களுக்கு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்தாமல், ஆளும் கட்சி சிபாரிசில் பணியிடமாறுதல் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கவுன்சிலிங் நடத்தி, பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு வந்தன.
இதனால் சிபாரிசு, செலவு இன்றி விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைத்தது. முன்கூட்டியே கவுன்சிலிங் நடத்தியதால், தங்களது குழந்தைகளையும் வேறு பள்ளிகளில் சேர்க்க ஏதுவாக இருந்தது. ஆனால், இந்த கல்வியாண்டில் இதுவரை இடமாறுதலுக்கான கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இதனால் விரும்பிய இடமாற்றம் கிடைக்காமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். ஆளும் கட்சியினர் சிபாரிசில் சிலருக்கு இடமாறுதல்கள் வழங்கப்படுவதாக ஆசிரியர்களிடையே குமுறல் எழுந்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி திண்டுக்கல் மாவட்டசெயலாளர் கணேசன் கூறுகையில், ''அரசு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வை நடத்தி, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும். சிபாரிசு அடிப்படையில் இடமாறுதல் ஆணை வழங்குவதை நிறுத்த வேண்டும்,'' என்றார்.


