ADDED : ஆக 18, 2011 10:05 AM
கரூர்: கரூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் சூரியகாந்தி பயிரிட்டுள்ள விசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் ஈச்சநத்தம், அரவக்குறிச்சி பகுதிகளில் சூரியகாந்தி அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. சூரிய காந்தி பூக்களில் மகரந்த சேர்க்கை நடக்கும் நேரமான தற்போது, தொடர் மழை காரணமாக பூக்கள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.