/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குழந்தையை மீட்டுத் தரக்கோரி தந்தை போலீசில் புகார்குழந்தையை மீட்டுத் தரக்கோரி தந்தை போலீசில் புகார்
குழந்தையை மீட்டுத் தரக்கோரி தந்தை போலீசில் புகார்
குழந்தையை மீட்டுத் தரக்கோரி தந்தை போலீசில் புகார்
குழந்தையை மீட்டுத் தரக்கோரி தந்தை போலீசில் புகார்
ADDED : செப் 16, 2011 03:18 AM
பண்ருட்டி:மனநிலை சரியில்லாத மனைவி மற்றும் அரசு காப்பகத்தில்
சேர்க்கப்பட்ட மகனை மீட்டுத்தரக்கோரி கணவர் போலீசில் புகார்
கொடுத்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்,32;
இவரது மனைவி சந்திரா, 24; இவர்களுக்கு 7 வயதில் ஒருமகனும், 2 வயதில் இரு
மகனும்(இரட்டை பிறவியில்) உள்ளனர். சந்திராவிற்கு மனநிலை சரியில்லாமல்
கடந்த இருமாதங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றவர் பின் 20 நாள் கழித்து
வீடு திரும்பினார்.கடந்த 5ம் தேதி 2 வயது குழந்தையை தூக்கிச் சென்ற சந்திரா
வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி நாளிதழில்
விருத்தாசலத்தில் அனாதை யாக கலெக்டர் உதவியுடன் அரசு காப்பகத்தில்
சேர்க்கப்பட்ட விவரம் ராஜேந்திரனுக்கு தெரியவந்தது. இதனை யடுத்து,
ராஜேந்திரன் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட தனது குழந்தையையும், மனநிலை
சரியில்லாத மனைவியையும் மீட்டு தரக்கோரி முத்தாண்டிக்குப்பம் போலீசில்
புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன
சந்திராவை தேடி வருகின்றனர். மேலும் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட
குழந்தை ராஜேந்திரனுடையதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


