/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/உழவர் சந்தைகளில் கடைகளை நடத்த ஆர்வமில்லை : விற்பனை குறைவால் விவசாயிகள் புறக்கணிப்புஉழவர் சந்தைகளில் கடைகளை நடத்த ஆர்வமில்லை : விற்பனை குறைவால் விவசாயிகள் புறக்கணிப்பு
உழவர் சந்தைகளில் கடைகளை நடத்த ஆர்வமில்லை : விற்பனை குறைவால் விவசாயிகள் புறக்கணிப்பு
உழவர் சந்தைகளில் கடைகளை நடத்த ஆர்வமில்லை : விற்பனை குறைவால் விவசாயிகள் புறக்கணிப்பு
உழவர் சந்தைகளில் கடைகளை நடத்த ஆர்வமில்லை : விற்பனை குறைவால் விவசாயிகள் புறக்கணிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் உழவர் சந்தைகளில், கடைகளை நடத்த, விவசாயிகள் ஆர்வம் காட்டாததால், உழவர் சந்தைகள், களை இழந்து காணப்படுகின்றன.
குறைந்தளவு கடைகள்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, அம்பத்தூர், நாரவாரிகுப்பம், பருத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் உள்ளன. துவக்கத்தில் நன்றாக செயல்பட்டு வந்த உழவர் சந்தை, படிப்படியாக விவசாயிகள் வருகை குறைந்ததால், மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அரக்கோணம் சாலையில் செயல்பட்டு வரும், திருத்தணி உழவர் சந்தையில், 42 கடைகள் உள்ளன. இந்த உழவர் சந்தை, 2000ல், அக்டோபர் 25ம் தேதி திறக்கப்பட்டது. துவக்கத்தில் விவசாயிகள் ஆர்வமாக காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். பின்னர் படிப்படியாக குறைந்து, தற்போது 8 கடைகள் மட்டுமே இயங்குகின்றன.
தற்போது வேளாண் மை கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படும் கடையிலிருந்து திருத்தணி, திருவாலங்காடு, மத்தூர் ஆகிய கோவில்களுக்கும், மாணவர் விடுதி மற்றும் கிளை சிறைச்சாலை ஆகியவைகளுக்கு மட்டும் காய்கறிகள் சப்ளை செய்யப்படுகின்றன. ஆனால், பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால், விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்துவிட்டது. இதனால், தனியார் காய்கறி மார்க்கெட்டிற்கு மக்கள் செல்கின்றனர்.