ADDED : செப் 21, 2011 11:09 PM
நெல்லிக்குப்பம்:வரக்கால்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில்
மாணவ, மாணவிகளுக்கு சீருடை, அடையாள அட்டை, மரக்கன்று வழங்குதல்,
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும்
முப்பெரும் விழா நடந்தது.தலைமை ஆசிரியை ஜெயா தலைமை தாங்கினார்.
ஊராட்சித்
தலைவர் ராஜாத்தி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜசேகரன் வரவேற்றார்.
புதுச்சேரி நவசக்தி டவுன்ஷிப் டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் மணிரத்னம்
மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கினார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்
400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 8 மாணவ, மாணவிகளுக்கு பரிசு
வழங்கினார்.வரும் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண்
எடுக்கும் 80 மாணவர்களும் பரிசு வழங்குவதாக தெரிவித்தார். அடையாள அட்டையை
கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் தலைவர்
வினோத்குமார் மரக்கன்றுகள் வழங்கினார்.சென்னை சட்டப் பல்கலைக்கழக
தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் வின்சென்ட் காமராஜ், அனைத்து குடியிருப்போர்
நலச்சங்க பொதுச் செயலர் மருதவாணன், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக
உதவியாளர் (இடைநிலை) ரவிச்சந்திரன், ஸ்டேட் பாங்க் மேலாளர் வரதராஜன்,
தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.மாணவ,
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.