ADDED : செப் 18, 2011 10:25 PM
திண்டிவனம்:திண்டிவனம் வால்டர் ஸ்கடர் பள்ளி மாணவர்கள் சார்பில் புகையிலை
ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப்
ராஜரத்தினம் தலைமை தாங்கினார்.
சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ஊர்வலத்தை துவக்கி
வைத்தார்.ஊர்வலம் ராஜாஜி தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு, நேருவீதி
வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. என்.சி.சி., கமாண்டர் மோகன், என்.
எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சாக்ரடீஸ் விஜயகுமார், உடற்கல்வி இயக்குனர்
பிரேம்சந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.