ADDED : அக் 15, 2011 02:05 AM
கோவை : உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, இன்று 15ம் தேதி முதல் 19ம் தேதி
வரை தொடர்ச்சியாக ஐந்து நாட்களும், 21ம் தேதி ஓட்டு எண்ணிக்கையன்றும்,
மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு,
அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. அக்.,17, 19ம்
தேதிகளில் பதிவு செய்யப்படும் ஓட்டுக்கள் அனைத்தும், 21ம் தேதி
எண்ணப்படுகின்றன. தேர்தலின்போதும், ஓட்டு எண்ணிக்கை தினத்திலும், அசம்பாவித
சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு, மதுக்கடைகள் மற்றும் பார்களுக்கு
விடுமுறை விடும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முதல் கட்ட
தேர்தலுக்கான பிரசாரம் முடியும் நேரம் முதல், இரண்டாம் கட்ட தேர்தல்
ஓட்டுப்பதிவு முடியும் நேரம் வரை, தொடர்ச்சியாக ஐந்து நாள் மதுக்கடைகளை மூட
உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல, ஓட்டு எண்ணிக்கை தினத்திலும் மதுக்கடைகளை
மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் கருணாகரன் வெளியிட்டுள்ள
அறிக்கை: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து
டாஸ்மாக் மதுக்கடைகள், அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள் (பார்),
எப்.எல்., வரிசை உரிமம் பெற்ற பார்கள் அனைத்தும், அக்.,15ம் தேதி மாலை 5
மணி முதல் 19ம் தேதி மாலை 5 மணி வரை மூடப்பட வேண்டும். ஓட்டு எண்ணிக்கை
தினமான 21ம் தேதியும் மதுக்கடைகளும், பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
விதிமுறைகளுக்கு முரணாக, குறிப் பிட்ட இந்த தேதிகளில் மது விற்பனை செய்வோர்
மீது குற்றவியல் சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு,
கலெக்டர் தெரிவித் துள்ளார்.


