Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பேர்பெரியான்குப்பத்தில் 28ம் தேதி மனுநீதி நாள் முகாம்

பேர்பெரியான்குப்பத்தில் 28ம் தேதி மனுநீதி நாள் முகாம்

பேர்பெரியான்குப்பத்தில் 28ம் தேதி மனுநீதி நாள் முகாம்

பேர்பெரியான்குப்பத்தில் 28ம் தேதி மனுநீதி நாள் முகாம்

ADDED : செப் 05, 2011 11:49 PM


Google News

கடலூர்: பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பத்தில் வரும் 22ம் தேதி கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: முகாமையொட்டி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற வசதியாக பேர்பெரியான்குப்பத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில் தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை 7ம் தேதி அனைத்து துறை அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற உள்ளனர். இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை மனுநீதி நாளன்று தெரிவிக்கப்படும். மேலும், மனுநீதி நாளன்று பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாம், விவசாய திட்டங்களின் செயலாக்கம், ஊட்டச்சத்து மற்றும் சிறுசேமிப்பு துறைகளின் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us