ADDED : ஜூலை 27, 2011 11:28 PM
தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த வரஞ்சரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.இக்கோவிலில் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
தினமும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலாவும், கோவிலில் மாரியம்மன் சரித்திர பாரத சொற்பொழிவு நடந்தது. கடந்த 24ம் தேதி காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.கடந்த 25ம் தேதி உற்சவர் அம்மன் சிலை திருத்தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.


